பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை மாலை கோலாலம்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.
இந்தப் பயணமானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு விரிவான மூலோபாயக் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பயணமாகும்.
இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை முறை விரைவில் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், மலேசியாவில் ஒரு புதிய இந்திய துணைத் தூதரகம் திறக்கப்படும் என்றும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இது மலேசியாவில் வாழும் சுமார் 29 லட்சம் இந்திய வம்சாவளியினருக்குப் பெரும் பயனுள்ளதாக அமையும்.
மலேசியாவில் பிரதமர் மோடி: புதிய துணைத் தூதரகம், திருவள்ளுவர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு
