யானைகள். கவிஞர் இரா .இரவி !
யானைகள் கூட
வரிசையாக
மனிதர்கள் ?
விலங்காக இருந்தாலும்
உள்ளது
ஒரு ஒழுங்கு !
காட்டை அழித்து
சிலை வைத்ததை கண்டித்து
யானைகள் பேரணி !
ஐந்தறிவு என்ற போதும்
தோற்கடித்தன
ஆறு அறிவை மனிதனை !
துன்பம் தராதவரை
துன்பம் தருவதில்லை
யானைகள்
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !