யானைகள்.

யானைகள். கவிஞர் இரா .இரவி !

யானைகள் கூட
வரிசையாக
மனிதர்கள் ?

விலங்காக இருந்தாலும்
உள்ளது
ஒரு ஒழுங்கு !

காட்டை அழித்து
சிலை வைத்ததை கண்டித்து
யானைகள் பேரணி !

ஐந்தறிவு என்ற போதும்
தோற்கடித்தன
ஆறு அறிவை மனிதனை !

துன்பம் தராதவரை
துன்பம் தருவதில்லை
யானைகள்

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

Please follow and like us:

You May Also Like

More From Author