உலகளவில் தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ. 57 ஆயிரமாக இருந்த சவரன் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதற்கு சர்வதேச அளவிலான போர் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.
கடந்த மாதத்தில் அமெரிக்க – கிரீன்லாந்து போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 5 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இனிமேல் விலையேற்றம் இதேபோன்றுதான் இருக்குமா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில், மத்திய பட்ஜெட் மற்றும் அமெரிக்க வங்கி வட்டி விகித மாற்றங்கள் காரணமாக, தங்கம் விலை சமீப நாட்களாக ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹3,120 குறைந்த தங்கம், காதலர் தினமான இன்று மீண்டும் உயரத் தொடங்கியதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை அதிகரிப்பதால் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (பிப்.14) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 14,560க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,16,480க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நரேந்திர மோடி ஏன் தங்கம் வாங்க வேண்டாம் என சொல்கிறார். தற்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா? எதிர்காலாத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது [மேலும்…]
ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. உத்தர பிரதேசத்தில் [மேலும்…]
தமிழகத்தில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, டாஸ்மாக் கூட்டுக்குழுவினர் மிகக் கடுமையான மற்றும் அதிரடியான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அரசு சார்பில் 717 [மேலும்…]
5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் 2-ம் கட்டமாக நெதர்லாந்து சென்றடைந்த, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அரசு தரப்பிலும், இந்திய வம்சாவளியினர் தரப்பிலும் உற்சாக [மேலும்…]
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கரூர் மாவட்ட ஆட்சியராக முத்துக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். பொன்னேரி சார் ஆட்சியராக அப்துல் ரஷீத், ஸ்ரீபெரும்புதூர் [மேலும்…]
உதகை தாவரவியல் பூங்காவால் வருகிற 18ம் தேதி துவங்குகிறது, பிரசித்தி பெற்ற 128வது மலர் கண்காட்சி முன்னிட்டு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. [மேலும்…]
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அபார வளர்ச்சி குறித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது விவாதப்பொருளாக [மேலும்…]