ரஃபேல் ஒப்பந்தத்தில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையே முதன்மையாக இருக்கும் – இமானுவேல் மேக்ரான் உறுதி!

Estimated read time 0 min read

ரஃபேல் ஒப்பந்தத்தில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையே முதன்மையாக இருக்கும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இருவரும் இருநாட்டு பரஸ்பர நலன்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் பேசிய இமானுவேல் மேக்ரான், ரஃபேல் ஒப்பந்தத்தில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையே முதன்மையாக இருக்கும் என தெரிவித்தார். இந்தியாவுடன் இணைந்து விமானங்களை தயாரிப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மேக்ரான் கூறினார்.

மேலும் 140 கோடி மக்களுக்கும், இந்தியா டிஜிட்டல் அடையாள அமைப்பை உருவாக்கியுள்ளதாக கூறிய அவர், இது வேறு எந்த நாட்டிலும் செயல்படுத்தப்படாத சாதனை என புகழாரம் சூட்டினார்.

இதேபோல் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸும், பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இருவரும் இருதரப்பு நட்புறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

You May Also Like

More From Author