மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கேள்வி எழுப்ப திட்டம்  

Estimated read time 1 min read

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல முக்கியமான பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து மற்றும் பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் அட்டூழியங்கள் ஆகியவை இதில் அடங்கும் என்று கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை சோனியா காந்தி தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற உயர்மட்ட காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

More From Author