2027 ஆம் ஆண்டு ஏஐ உச்சி மாநாட்டை நடத்த ஆவலுடன் காத்திருப்பதாக சுவிட்சர்லாந்து அதிபர் கை பர்மெலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து அதிபர் கை பெர்மலின் வருகை தந்துள்ளார். தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.
அப்போது இருவரும் இருநாட்டு பரஸ்பர நலன் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் டிஜிட்டல் மற்றும் AI துறை குறித்து இருவரும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா நடத்தும் ஏஐ உச்சி மாநாடு ஒரு மைல்கல் நிகழ்வு என தெரிவித்தார். மேலும் ஜெனீவாவில் 2027ம் ஆண்டுக்கான ஏஐ உச்சி மாநாட்டை நடத்த சுவிட்சர்லாந்து ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
