என்சிஇஆர்டி புத்தகங்களை பறிமுதல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு  

Estimated read time 1 min read

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற தலைப்பில் ஒரு பகுதி இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அந்தப் புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் உடனடியாகப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, இந்தப் பாடப்பகுதியைச் சேர்த்தது நீதித்துறையின் பெயரைக் கெடுப்பதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு ஆழமான சதி என்று கடுமையாக சாடியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author