உலகின் முன்னணி போக்குவரத்து நிறுவனமான உபர், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜோபி ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து உபர் ஏர் என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் தங்களின் உபர் செயலி வாயிலாகவே எலக்ட்ரிக் பறக்கும் டாக்ஸிகளை முன்பதிவு செய்ய முடியும்.
இந்த அதிநவீன வான்வழி டாக்ஸி சேவை இந்த ஆண்டு (2026) துபாயில் தனது முதல் பயணத்தைத் தொடங்க உள்ளது. நகர்ப்புறப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் இது ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
உபர் ஆப்பிலேயே இனி பறக்கும் டாக்ஸி புக் செய்யலாம்; துபாயில் விரைவில் அறிமுகம்
