பொலிவியா நாட்டின் லா பாஸ் அருகே உள்ள எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்நாட்டு விமானப்படைக்குச் சொந்தமான ஹெர்குலஸ் ரக சரக்கு விமானம் ஒன்று நேற்று (பிப்ரவரி 27, 2026) விபத்துக்குள்ளானது.
ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற அந்த விமானம், தீப்பிடித்து எரிந்தபடி அருகில் இருந்த நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறைத் தலைவர் பாவெல் தோவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பலியானவர்களில் விமான ஊழியர்கள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் அடங்குவர்.
பொலிவியாவில் சரக்கு விமானம் விபத்து: 15 பேர் பலி, சிதறிக் கிடந்த கரன்சிகள்
