மணிக்கு 500 கி.மீ வேகம்! – ஜப்பான் புல்லட் ரயிலில் சீறிப்பாய்ந்த யோகி ஆதித்யநாத்: வீடியோ வைரல்..!

Estimated read time 1 min read

ஜப்பானில் இயங்கும் புதிய தலைமுறை அதிவேக புல்லட் ரயிலான, ‘மேக்லேவ் ரயில்’ மணிக்கு சுமார் 500 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டது.

பாதுகாப்பு மற்றும் துல்லிய நேர கட்டுப்பாட்டில், உலகத் தரத்தைக் கொண்ட இந்த ரயில் சேவையை, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் பார்வையிட்டார்.ரயிலில் பயணம் செய்தபோது, அதன் உள் கட்டமைப்பு, பயணிகள் வசதி, அதிநவீன கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவை குறித்தும் அதிகாரிகளுடன் விவரமாகக் கேட்டறிந்தார்.

இந்த பயணத்தின் போது, இந்தியா – ஜப்பான் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அதிவேக ரயில் திட்டங்களை விரைவுபடுத்த, ஜப்பானின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. யோகி ஆதித்யநாத் புல்லட் ரயிலில் பயணம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

You May Also Like

More From Author