ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களை இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது.
இதனை ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அண்டை நாட்டின் இறையாண்மையை மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் விமானங்கள் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.
இது குறித்துப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “ஆப்கானிஸ்தானின் சிவிலியன் உள்கட்டமைப்புகளை அழித்து, பொதுமக்களின் உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்துள்ள பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலை இந்தியா கண்டிக்கிறது.
இறையாண்மை கொண்ட ஆப்கானிஸ்தான் என்ற கருத்தியலுக்கு எதிராகச் செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்தின் மற்றொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை இது.” என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்
