ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அதன்எரியாற்றல் உற்பத்தி உபகரணங்களுக்கு மாறியதோடு, இந்தப் போர் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. போர் வெறி கொண்ட அமெரிக்கா தன்னைப் போரின் குழியில் சிக்கிக்கொள்ளச் செய்துள்ளது.
அண்மையில், சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் உலக இணையப் பயனர்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன்படி, போர் வெறி கொண்ட அமெரிக்கா இராணுவவாதத்தில் ஊன்றி நிற்கின்றது. அமெரிக்க மேலாதிக்கம் வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்று 94.1விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
அரசின் ஆதரவுடனான பயங்கரவாதம் என்ற அமெரிக்காவின் செயல்களுக்கு 90.9விழுக்காட்டினர் கண்டனம் தெரிவித்தனர். அதன் டாலர் மேலாதிக்கத்தைப் பேணிக்காத்து ஈரானின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிப்பது அமெரிக்கா போரை நடத்தியதற்கான நோக்கமாகுமென 89.1விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
