இந்தியக் கல்வி முறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, சிபிஎஸ்இ தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை (MHM) முறைகளைக் கட்டாயமாக்கியுள்ளது.
ஜனவரி 20, 2026 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், மாதவிடாய் சுகாதாரம் என்பது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்புச் சட்டம் 21ன் படி, கௌரவமாக வாழ்வதற்கான உரிமையில் மாதவிடாய் சுகாதாரமும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
முறையான வசதிகள் இல்லாததால் மாணவிகள் பள்ளிக்கு வராமல் இருப்பதையும், படிப்பைப் பாதியிலேயே நிறுத்துவதையும் தடுக்க இந்தத் தீர்ப்பு வழிவகை செய்கிறது.
சிபிஎஸ்இயின் புதிய மாதவிடாய் சுகாதார விதிகள்: மாணவியும் பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டியவை
