துர்க்மெனிஸ்தான் தேசிய இன தலைவரும் மக்கள் பேரவையின் தலைவருமான பெர்திமுகமேதோவ் சீன ஊடகக் குழுமத்திற்கு சிறப்பு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
துர்க்மெனிஸ்தான்-சீன தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 34 ஆண்டுகளுக்கு பிறகு, இரு நாட்டு ஒத்துழைப்பு உயர் நிலையை எட்டியுள்ளது என்றார்.
இரு நாட்டுறவு வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 15ஆவது ஐந்தாண்டு திட்டம், சீனாவின் உயர் தர வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்கும். ஷி ச்சின்பிங்கின் தலைமையில், பல்வேறு துறைகளில் சீனா நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது. உலக பாதுகாப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கு சீனா முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
