தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அதிக விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அம்மச்சியாபுரம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல் 2 ஆயிரத்து 300 ரூபாய் வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 200 ரூபாய் வரை உயர்ந்து 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
