தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  

Estimated read time 0 min read

தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு திசையிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு மற்றும் வங்கக் கடலில் காற்று சுழற்சிகள் அடிக்கடி உருவாகும் நிலை காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன் விளைவாக கடந்த இரண்டு நாட்களாக வடகடலோர மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது.
இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மேலும், இன்று தமிழகத்தில் மேலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author