அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  

Estimated read time 1 min read

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
மதுரை விமானநிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 39.7° செல்சியஸும், ஈரோட்டில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 19.6° செல்சியஸும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
20.09.2024 மற்றும் 21.09.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.09.2024 முதல் 26.09.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Please follow and like us:

You May Also Like

More From Author