அண்மையில், இலங்கை தலைமை அமைச்சர் அமாலாசுரியா அம்மையார் சீன ஊடகக் குழுமத்திற்கு சிறப்பு பேட்டியளித்தார்.
சீனாவின் வளர்ச்சி குறித்து அவர் அப்போது கூறுகையில்,
சீனா எட்டியுள்ள அனைத்து சாதனைகளையும் பார்த்தால், மிக வியப்பான உணர்ச்சியடைவீர்கள் என்றார்.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த மனித பொது எதிர்கால சமூகம் என்ற கருத்தைப் பாராட்டிய அவர் கூறுகையில்,
மனித பொது எதிர்கால சமூகம் பற்றிய கருத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டு, கூட்டாக முயற்சி செய்ய வேண்டும். தனிமையான சிந்தனையை விட்டுவிட வேண்டும் என்றார்.
ஒன்றுக்கு ஒன்று மதிப்பு, உறுதி மொழி மற்றும் நம்பிக்கையை அளிப்பதென்ற அடிப்படையில் உருவாக்கப்படும் உறவு, இருதரப்புறவின் மாதிரியாக மாறும். இது இரு நாடுகளுக்கு நன்மை பயக்கும் என்று அமாலாசுரியா அம்மையார் தெரிவித்தார்.
