அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யின் மேயர் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தேனியில் பிறந்து, தனது 7வது வயதில் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த ரிணி சம்பத், வரும் விரைவில் நடைபெறவுள்ள மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம், வாஷிங்டன் டி.சி. மேயர் தேர்தலில் களமிறங்கும் முதல் தெற்காசியப் பெண்மணி என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
“அமெரிக்கக் கனவைத் தேடி வந்த நான், இன்று வாஷிங்டன் டி.சி. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகப் போட்டியிடுவது எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் மேயர் தேர்தலில் களமிறங்கும் தேனி பெண் ரிணி சம்பத்
