தமிழ் திரையுலகின் மூத்த கலைஞரும், இயக்குனருமான டி. ராஜேந்தர், தனது மகன் சிலம்பரசன் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
ஆனால், சிலம்பரசன் ஏற்கனவே ஒப்பந்தமான முந்தைய படங்களின் நிலுவையில் உள்ள சிக்கல்கள் காரணமாக, இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடரக் கூடாது எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தனது மகனுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ள டி. ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்கத்தின் தன்னிச்சையான போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தம்! கொதித்தெழுந்த டி. ராஜேந்தர்
