தமிழ்நாட்டு மக்கள் புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வாக்காளர்கள் வழிவகை செய்ய வேண்டும் என்றும், பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
