வினாத்தாள் கசிவுக்குக் கடுமையான தண்டனை: நள்ளிரவு வெளியான பிரதமர் மோடியின் வீடியோ செய்தி  

Estimated read time 1 min read

டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அமைப்பின் தலைமையிலும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
வியாழக்கிழமை இரவு வெளியிட்ட சிறப்பு வீடியோ செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி, “வினாத்தாள் கசிவு என்பது சாதாரண விஷயம் அல்ல; இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
கடந்த இரண்டரை மாதங்களில் தவறு செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

More From Author