இந்திய அரசின் கல்வி அமைச்சகம் மற்றும் ஏஐசிடிஇ ஆகியவற்றின் கீழ் இயங்கும் அனுவாதினி ஏஐ நிறுவனம், மேத்ஸோரோ (MathZoro) தளத்துடன் இணைந்து ஒரு புதிய கல்விப் புரட்சியைத் தொடங்கியுள்ளது.
6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கணிதப் பாடத்தை மிகவும் எளிமையாகவும் ஈடுபாட்டுடனும் கற்பிப்பதற்காக விளையாட்டு முறையிலான (Gamified Learning) இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான மொழியில் கணிதக் கருத்துக்களை ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.
6-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏஐ மூலம் விளையாட்டு முறை கணிதக் கல்வி!
