மே 8 ஆம் தேதி மாலை ஒடிசா வான்பரப்பில் ஒரு பிரகாசமான வால்மீன் போன்ற பொருள், நீண்ட சுருள் போன்ற புகையை விட்டுச் சென்றது அங்கிருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த வினோதக் காட்சி ஒடிசாவில் மட்டுமல்லாமல், பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் வரை தெளிவாகத் தெரிந்தது.
இது ஏலியன்களின் விண்கலமா அல்லது ஏதேனும் மர்மப் பொருளா என்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் குவியத் தொடங்கின.
அந்திப் பொழுதில் ஏவப்படும் ஏவுகணைகளின் வெளியேற்ற வாயுக்கள், அதிக உயரத்தில் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும்போது இத்தகைய பிரகாசமான காட்சி தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ரகசிய அக்னி எம்ஐஆர்வி ஏவுகணை சோதனை வெற்றி
