அன்னையர் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் மிகவும் உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2026இல் வரும் மே 10 அன்று தாய்மார்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் குடும்பத்திற்காக செய்யும் அளப்பரிய தியாகங்களை நினைவுகூரும் நாளாக அமையவுள்ளது.
உயிரியல் ரீதியான அன்னையர்களைத் தாண்டி, நம்மை வளர்த்தெடுத்த பாட்டிகள், வளர்ப்புத் தாய்மார்கள் மற்றும் வழிகாட்டியாகத் திகழும் தாய்மைப் பண்பு கொண்ட அனைவரையும் போற்றுவதற்கு இந்த நாள் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
எளிய வாழ்த்துச் செய்திகள் முதல் அன்பளிப்புகள் வரை அவரவர் பாணியில் இந்த நாள் கொண்டாடப்பட்டாலும், அதன் அடிப்படை நோக்கம் என்பது தாயின் அன்பிற்கு நன்றி செலுத்துவதாகும்.
அன்னையர் தினம் 2026: தேதி, வரலாறு மற்றும் உலகளாவிய கொண்டாட்ட முறைகள்
