காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை – மு.க.ஸ்டாலின் வேதனை!

Estimated read time 0 min read

திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி ஆளும் திமுக அரசை வீழ்த்தியது. இந்தநிலையில், தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்பட்டன.

இதனால், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியிடம் தவெக ஆதரவு கோரியது. தவெகவின் கோரிக்கையை ஏற்ற காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணி உடனான உறவை முறித்துக் கொண்டு ஆதரவு கோரியது.

இதனால், காங்கிரஸ் கட்சியின் மீது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்தநிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author