தமிழகத்தின் முதல்வராக புதிதாக பொறுப்பேற்ற தவெக தலைவர் விஜய் தனது முதல் கையெழுத்தாக மூன்று முக்கிய ஆணைகளை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விஜய் தமிழகத்தின் 13வது முதல்வராக பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதைத் தொடர்ந்து 500 யூனிட்களுக்கு உள்ளே பயன்படுத்தும் மக்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்புக்கு சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்டந்தோறும் போதைப்பொருள் தடுப்பு யூனிட்களைகளை அமைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவில் கூடியிருந்த பொதுமக்களிடம் நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.
முதல்வராக விஜய் போட்ட முதல் கையெழுத்து
