மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

Estimated read time 0 min read

ஒசூர், கோவை, மதுரை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் ஜோசப் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கை மனுவினை வழங்கினார்.

அந்த கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை தமிழக அரசின் மக்கள் செய்தி தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று முதலமைச்சர் ஜோசப் விஜய் கேட்டுக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது.

அதே போல தமிழகத்தின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டில் நிறுவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் நிதியமைச்சரிடம் முதலமைச்சர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author