அதிமுக எம்எல்ஏ பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்யவுள்ளதாக பரவி வரும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது பெரும் பரபரப்பானது. இதனை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் சபாநாயகரிடம் அளிக்கப்பட்டிருந்த கொறடா தொடர்பான இருதரப்பு மனுக்களும் வாபஸ் பெறப்பட்டன. அதே நேரத்தில் இந்த முக்கிய சந்திப்புகளில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் அவரை சமாதானப்படுத்த சென்றபோது, சி.வி.சண்முகம் கடும் அதிருப்தியில் அங்கிருந்து வெளியேறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் சி.வி.சண்முகம் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதனால் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
