தமிழக முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்திக்காமல் டெல்லியில் இருந்து அவசரமாகப் புறப்படுகிறார்.
இன்று காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், திடீரென அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், இன்னும் சற்று நேரத்தில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் சென்னை திரும்புகிறார்.
