தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் (Ease of Doing Business), புதிய நிறுவனங்களுக்கான அனைத்து அரசு அனுமதிகளையும் அதிகபட்சமாக 21 நாட்களுக்குள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு ஒற்றைச்சாளர இணையதளம்’ (TNSWP – Tamil Nadu Single Window Portal) மூலம் முதலீட்டாளர்கள் தங்களுக்குத் தேவையான உரிமங்களை விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதில் இருந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தடையில்லாச் சான்றிதழ்கள் (NOC) மற்றும் இதர அனுமதிகள் மின்னணு முறையில் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுகின்றன.
