சென்னை அண்ணா நகரில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்!

Estimated read time 0 min read

சென்னை அண்ணா நகரில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை அண்ணாநகரில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மனநல பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்காகச் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் பல்வேறு துறைகளில் திறமை பெற்ற 300க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

வேலைவாய்ப்பிற்காக கடும் போட்டி நிலவும் இன்றைய காலகட்டத்தில், மனநலப் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தவர்களுக்காகச் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டது பயனுள்ளதாக இருந்ததாக பயனாளிகள் கூறினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author