கர்நாடக காங்கிரஸ் அரசில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வந்த உட்கட்சி அதிகாரப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் நடத்திய தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் நேரடி அறிவுறுத்தலின் பெயரிலேயே, கட்சிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தான் பதவி விலகத் தயாராகிவிட்டதாகச் சித்தராமையா தனது நெருங்கிய அமைச்சர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
