உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா ஏமாற்றமளிக்கும் வகையில் எட்டாவது இடத்தைப் பிடித்தார்.
அதேசமயம், அறிமுக வீரரான மற்றொரு இந்திய விளையாட்டு வீரர் சச்சின் யாதவ், தனது சிறந்த தனிப்பட்ட சாதனையைப் பதிவு செய்து நான்காவது இடத்தைப் பிடித்து அசத்தினார்.
2021 ஒலிம்பிக்கில் வரலாற்றுச் சாதனை படைத்த அதே டோக்கியோ மைதானத்தில், இம்முறை நீரஜ் சோப்ரா தனது ஐந்து முயற்சிகளிலும் 90 மீட்டர் தூரத்தை எட்டவில்லை.
அவரது சிறந்த தூரம் 84.03 மீ மட்டுமே, இது அவரை ஐந்தாவது சுற்றிலேயே போட்டியிலிருந்து வெளியேற்றியது.
உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஏமாற்றம்
