தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்க ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை’ உருவாக்கப்படும் என தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, அவர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் இந்தச் சிறப்புப் படையை உருவாக்குவதற்கான முக்கிய அரசாணைக் கோப்பில் முதலாவதாகக் கையெழுத்திட்டார்.
முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட உள்ள இந்த அதிமுக்கியப் படையின் தலைமை அதிகாரியாக ஐஜி பவானீஸ்வரி கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
