உலகெங்கும் இன்று 12வது சர்வதேச யோகா தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகக் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஆகியோரும் பிரதமருடன் இணைந்து பங்கேற்றனர்.
அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகை ஒன்றிணைக்கும் யோகாவின் சக்தி குறித்தும், ஆரோக்கியமான முதுமையின் அவசியம் குறித்தும் மிக முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
சர்வதேச யோகா தினம் பிரதமர் மோடி அறிவுரை
