ஈரான் மீதான தனது வான்வழித் தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது நாளாக தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த கடுமையான இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், வாஷிங்டனுடன் ஒரு சுமுகமான உடன்பாட்டை எட்டவே ஈரான் விரும்புவதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இன்னும் திறந்தே இருப்பதாகவும் அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
CENTCOM தகவலின்படி, ஈரானின் இராணுவப் பலத்தை முற்றிலுமாக முடக்கும் நோக்கில் இந்த புதிய அலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஈரானின் மிக முக்கிய வணிக மற்றும் கடற்படை மையமான தெற்குப் பகுதி துறைமுக நகரான பண்டார் அபாஸ் மற்றும் கெஷ்ம் தீவு ஆகிய பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் மிகக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்கா – ஈரான் போர் தீவிரம்: பண்டார் அபாஸ் துறைமுகத்தில் அமெரிக்கா மீண்டும் குண்டுவீச்சு
