தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) தனது கோடிக்கணக்கான சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டிப் பணத்தை வரவு வைத்துள்ளது.
அதன்படி, 2025-26 நிதியாண்டிற்கான 8.25 சதவீத வட்டித் தொகையானது சுமார் 34 கோடி உறுப்பினர்களின் கணக்குகளில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் முழுமையாக ஏற்றி முடிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக செப்டம்பர் அல்லது நவம்பர் மாதம் வரை நீடிக்கும் இந்த செயல்முறை, இபிஎஃப்ஓ வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு மிக விரைவாக ஜூலை மாத பாதியிலேயே முடிக்கப்பட்டுள்ளது பிஎஃப் சந்தாதாரர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிஎஃப் கணக்கு வச்சிருக்கீங்களா? 34 கோடி பேருக்கு வட்டிப் பணம் கிரெடிட்! பேலன்ஸ் செக் செய்வது எப்படி?
