“கடலூரில் குவியும் விசிக தொண்டர்கள்… தலைவர் திருமாவளவனின் வருகையால் களைகட்டும் அரசியல் களம்…!!” 

Estimated read time 1 min read

கடலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள விசிக முக்கியப் பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் நாளை கடலூர் வருகை தருகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர் ஐக்கியப் பேரவையின் மாநில முதன்மைச் செயலாளர் ச. பாவாணன் அவர்களின் இல்லத் திருமண விழா கடலூரில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்த விழாவில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சிறப்பிக்க உள்ளார்.

“>

இதையொட்டி கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தோழர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கத் தயாராகி வருகின்றனர்.

You May Also Like

More From Author