இந்திய விமானப்படை, ரஷ்ய தயாரிப்பான அதிநவீன S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு செயல்படும் முதல் வீடியோ காட்சிகளை இன்று (பிப்ரவரி 26, 2026) வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தானில் நாளை நடைபெறவுள்ள வாயுசக்தி போர் பயிற்சியின் முன்னோட்டமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இதில் எதிரி நாட்டு விமானங்களை ரேடார் மூலம் கண்டறிந்து, ஏவுகணையைச் செலுத்தி அழிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
“எதிரிகள் எட்டாத தூரத்தில் இருக்கலாம், ஆனால் எங்கள் பார்வையில் இருந்து தப்ப முடியாது” என்ற சக்திவாய்ந்த வாசகத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
