எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) அதன் இணைய பதிப்பில் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது.
உலகெங்கிலும் உள்ள பயனர்கள் தங்கள் கணக்குகளை அணுக முடியாமல் போன சில நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் அதே பிரச்னை எழுந்துள்ளது.
தற்போதைய செயலிழப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை.
ஆனால் இந்தியாவில் சில பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டவுன்டெக்டரின் அறிக்கைப்படி , இந்திய நேரப்படி மதியம் 1:00 மணியளவில் பயனர்கள் பலரும் செயலிழப்பைப் பற்றி புகாரளிக்கத் தொடங்கியதாகக் கூறுகிறது.
தொழில்நுட்பக் கோளாறானது பயனர்கள் தங்கள் டைம் லைனை பார்ப்பதிலிருந்தும், ட்வீட்களை இடுகையிடுவதிலிருந்தும் அல்லது இணைய உலாவியின் மூலம் பிரபலமான தலைப்புகளை ஆராய்வதிலிருந்தும் தடுக்கிறது.