தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது; 97.54% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

Estimated read time 0 min read

தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
அதில், 97.54% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே முதல் இடத்தைபெற்றுள்ளது திரூப்பூர் மாவட்டம்.
அடுத்ததாக சிவகங்கை (97.42%), ஈரோடு (97.42%), அரியலூர் (97.25%), கோவை (96.97%) ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அடிப்படையிலும் திருப்பூர் (95.75%) முதல் இடத்தில் உள்ளது.
அதனை தொடர்ந்து, அரியலூர் (95.64%), ஈரோடு (95.63%), சிவகங்கை (95.56%), தூத்துக்குடி (94.13%) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை தேர்ச்சி விகிதம் 94.56% என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 0.53% அதிகமாகும்.
அதே நேரத்தில் வழக்கம் போல, இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author