பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவர்களின் முடிவுகள் “பயங்கரவாதத்திற்கு வெகுமதி” வழங்குவதற்கு ஒப்பானது என்று கூறினார்.
இதனால் ஹமாஸ், இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலை மீண்டும் நடத்த முயற்சிக்கும் என்றும் அவர் கூறினார்.
பாலஸ்தீனத்தை பயங்கரவாத நாடு என்று கூறிய நெதன்யாகு, ஒரு கருத்துக்கணிப்பை மேற்கோள் காட்டி, காசாவில் போரைத் தூண்டிய இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை மேற்குக் கரையில் உள்ள 80 சதவீத பாலஸ்தீனியர்கள் ஆதரித்ததாக அவர் கூறினார்.மறுபுறம், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தின் முடிவை நிராகரித்தது.