ஜூன் 8ஆம் தேதி பிரதமர் மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் 

292 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை தாண்டி என்டிஏ வெற்றி பெற்றதால், நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜூன் 8ம் தேதி பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்தியாவில் ஆட்சியைத் தக்கவைத்து கொள்ளும் இரண்டாவது பிரதமராக மோடி இருப்பார்.

முன்னதாக, பொது தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்ய நடத்தப்ட்ட மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

மேலும் அடுத்த அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான விஷயங்கள் குறித்தும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Please follow and like us:

You May Also Like

More From Author