இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு சச்சின் வாழ்த்து!

டி20 உலகக்கிரிக்கெட் போட்டியில் இன்று மோதவுள்ள இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர், இந்திய பாகிஸ்தான் போட்டி என்றால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை முதல்முதலாக தான் எதிர்கொண்டதை அவர் நினைவுகூர்ந்தார்.

இரு அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறிய அவர், இருப்பினும் இந்திய அணிக்கு சற்று கூடுதலாக வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறினார்.

You May Also Like

More From Author