நாசாவின் இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான அனில் மேனன் (49), சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராகியுள்ளார். [மேலும்…]
Category: தமிழ்நாடு
கரூர் விவாகரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுகவுக்கு குட்டு; முதல்வர் விஜய் கரூர் செல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரையின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக [மேலும்…]
லோகோ பைலட்டுக்குத் திடீர் நெஞ்சுவலி: சமயோசிதமாக ரயிலை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்!
சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கும் (16089) மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கும் (16090) தினந்தோறும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வழக்கம் போல, சென்னை [மேலும்…]
அதிரும் தமிழக அரசியல்..!! ரூ. 50 கோடி குதிரை பேரம்: அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசிய வழக்கில், மூன்றாம் நாளாக இன்று திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் காவல் நிலையத்தில் தி.மு.க முன்னாள் [மேலும்…]
மீண்டும் சரிந்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,280 அதிரடி குறைவு!
சென்னை : தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்கத்தின் [மேலும்…]
ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது மிஸைல் தாக்குதல்
ஓமானின் கடற்கரைக்கு அருகில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மிஸைல் தாக்கியதில் ஒரு எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. ஓமானின் [மேலும்…]
மாவட்ட ஆட்சியருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்! ஏன் தெரியுமா ?
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற கொலை வழக்கு விசாரணை, கடந்த 10 ஆண்டுகளாக 5-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் குற்றவாளி [மேலும்…]
மக்களே உஷார்..! ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 07-07-2026 முதல் 08-07-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த [மேலும்…]
“தனியார் பள்ளிக்கு மட்டும் தான் அமைச்சரா?”.. அரசுப் பள்ளிகளின் அவல நிலையைப் பட்டியலிட்டுச் சீமான் அதிரடி தாக்கு..!!!
தனியார் பள்ளிகள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உருக்கமாகப் பேசியதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் (X) தளத்தில் [மேலும்…]
தோழர் புருஷோத்தமனின் இழப்பு பத்திரிகை உலகிற்கே பேரிழப்பு: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் புகழாரம்
சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
“உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் பரிசீலனை செய்க!”.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்-அமைச்சர் விஜய்..!
தமிழகத்தின் முதல்-அமைச்சர் விஜய், மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் [மேலும்…]
