கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரையின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சமீபத்தில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கரூர் விபத்திற்கு அப்போதைய திமுக அரசே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விவகாரம் தற்பொழுது சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும் எனக் கோரி திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
கரூர் விவாகரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுகவுக்கு குட்டு; முதல்வர் விஜய் கரூர் செல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை
