இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் சீனாவில் பயணித்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 1கோடியே 46லட்சத்து 35ஆயிரத்தை எட்டி, கடந்த ஆண்டை விட 152.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில், விசா விலக்கு கொள்கை பயன்படுத்தியவர்களின் பங்கு, 52 விழுக்காடு ஆகும்.
இந்த எண்ணிக்கை 85லட்சத்து 42ஆயிரமாகப் பதிவாகி, கடந்த ஆண்டை விட 190.1 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் தெரிவித்தது.
சுற்றுலா, வணிகம் மற்றும் குடும்ப வருகை ஆகியவற்றுக்காக விசா இன்றி சீனாவிற்கு வர அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் விரிவாகி வருவதுடன், பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
சீன சுற்றுலா ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய ஆய்வு அறிக்கையில், இவ்வாண்டின் பிற்பாதியில் சீனாவில் சுற்றுலா செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 1.5கோடியைத் தாண்டும். அதன்படி, முழு ஆண்டும் இந்த பதிவு 2019ஆம் ஆண்டில் இருந்ததன் 80 விழுக்காட்டிற்கும் மேல் மீட்சிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.