இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பினார்.
இந்த நிலையில், 41 வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரியாவிற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்ற போது என்ன நடந்தது என ஒரு ரிவைண்ட் பார்வை.
அவரின் விஜயத்தின் போது, ராணுவ தளவாடங்களுக்கான ஒப்பந்தங்களை இட்டார் என செய்திகள் கூறுகிறது.
குதிரை இறக்குமதியிலிருந்து தற்போது டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் புதுமைகளை அதிகரிக்க ஒரு கூட்டு ஹேக்கத்தான் வரை, ஆஸ்திரியாவுடன் இந்தியாவின் நட்புறவு எப்படி வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.