அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எல்லையில் மீண்டும் போர் நிறுத்த மீறலை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தின் கட்ச் எல்லையில் உள்ள ஹராமி நாலா மற்றும் காவ்டா பகுதிகளுக்கு அருகே பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டன.
அதே நேரத்தில் ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லாவில் பலத்த வெடிப்புகள் ஏற்பட்டதாகவும், அங்கு ட்ரோன்கள் மற்றும் அடையாளம் தெரியாத வான்வழி வாகனங்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்
